சிறுமி ஆஸிபா கொலையினை தொடர்ந்து காஷ்மீரில் மேலும் ஒரு கொடூர கொலை!

Image result for child rape


காஷ்மீரில் இருக்கும் கத்துவா என்ற கிராமத்தை சேர்ந்த 8 வயது பள்ளி படிக்கும் சிறுமி 'ஆஸிபா' 7 பேரால் வன்புணர்வு செய்யப்பட்டு கொல்லப்பட்டதும், அவ்வழக்கில் தொடர்புடைய அனைவரும் கைது செய்யப்பட்டதையும் நாம் கேள்விப்பட்டு அதிர்ச்சிக்குள்ளானோம். இந்நிலையில் சூரத்தில், 86 காயங்களுடன், மேலும் ஒரு 9 வயது சிறுமியின் உடலை போலீசார் கண்டெடுத்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் 6-ஆம் தேதி சூரத்தில் பெஸ்டன் பகுதியில் உள்ள ஒரு கிரிகெட் மைதானத்துக்கு அருகில், உடலில் 86 காயங்களுடன் 9 வயது சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 5 மணி நேரத்துக்கும் மேலாக நடந்த பிரேத பரிசோதனையில் அந்தச் சிறுமி, குறைந்தது 8 நாள்கள் பாலியல் வன்கொடுமை மூலம் சித்திரவதை செய்யப்பட்டு, நீண்ட நேரம் உயிருக்குப் போராடி பின் இறந்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

இறந்த சிறுமி யார் என்பது இன்னும் அடையாளம் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரின் குடும்பத்தை சேர்ந்த யாரும் சிறுமியின் உடலை வாங்கவும் முன் வரவில்லை. இதனால் கடந்த சில தினங்களுக்கு முன் காணாமல் போனதாக வந்த சிறுமிகளின் புகார்களை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்தது யார் என்பது பற்றிய விவரங்களும் இன்னும் தெரியவில்லை.

Comments