ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் நிச்சயம் தூங்கவில்லை- காங்கிரஸ்:




குஜராத்தில் தலித் இளைஞர்கள் மாட்டுத்தோல் கடத்தியதாய் தாக்கப்பட்டது தொடர்பான விவாதத்தின் போது, ராகுல்காந்தி பாராளுமன்றத்தில் தூங்கவில்லை என்றும் கீழ்நோக்கிக் கொண்டிருந்தார் என்றும் காங்கிரஸ் கட்சி விளக்கம் அளித்துள்ளது.  பாராளுமன்றத்தில் காரசாரமாய் விவாதம் நடந்து கொண்டிருந்த நிலையில் அரங்கேறியுள்ள ராகுலின் இச்செயல் பெரும் கண்டனத்தை பெற்றுள்ளது. இதைப் பற்றி மத்திய அமைச்சர் மகேஷ் ஷர்மா கூறுகையில் இச்சம்பவம் தலித் மக்கள் நலனில் காங்கிரஸ் கட்சி கொண்டுள்ள ஈடுபாட்டை காட்டுகிறது என குற்றம் சாட்டினார்.

Comments