சென்னையில் கிலியை கிளப்பும் அபாய ரயில் நிலையங்கள்!




சமீபத்தில் சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் நடந்த படுகொலை சம்பவத்தை தொடர்ந்து ரயில் நிலையங்களின் பாதுகாப்பு குறித்து ரயில்வே போலீசாரால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதன் முடிவில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் 25 பதட்டமிகு ரயில் நிலையங்கள் கண்டறியப்பட்டுள்ளன. இந்த ரயில் நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றும் கூடுதல் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பொது மக்கள் ரயில் நிலையங்களின் பிரதான நுழைவு வாயிலை மட்டும் பயன்படுத்தும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Comments