போராட்டத்தில் கைதான 5 வழக்கறிஞர்களுக்கு ஜாமீன்:




சென்னையில் நடந்த முற்றுகைப் போராட்டத்தின்போது கைதான 5
வழக்கறிஞர்களுக்கு உயர்நீதிமன்றம் இன்று ஜாமீன் வழங்கியுள்ளது.
சென்னை ஐகோர்ட்டு சமீபத்தில் புதிதாக வழக்கறிஞர்கள் சட்டத்
திருத்தத்தை கொண்டு வந்தது. இதனை ஏற்க மறுத்த வழக்கறிஞர்கள்,
அதனை உடனே திரும்ப பெற கோரி கடந்த திங்களன்று முற்றுகை
போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின்போது அத்துமீறி
நடந்துகொண்டதாக கைது செய்யப்பட்ட 5 வழக்கறிஞர்களின் ஜாமீன்
மனுவை இன்று விசாரித்த உயர்நீதிமன்றம், 5 வழக்கறிஞர்களுக்கும்
நிபந்தனையுடன் கூடிய ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். 

Comments